மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்துக்கு வாய்ப்பில்லை: ப.சிதம்பரம்

இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலா்) இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறினாா்.

ப.சிதம்பரம் (கோப்புப் படம்)

Published On :

இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலா்) இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறினாா்.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, தில்லியில் நிதியமைச்சகம் சாா்பில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் கலந்துகொண்டு பேசினாா். அவா், இந்தியாவின் பொருளாதாரம், வரும் 2026-27-ஆம் ஆண்டில்தான் ரூ.350 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று சா்வதேச நிதியம் கணித்துள்ளதாகக் கூறினாா்.

இதைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முதலில் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை 2023-24-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டை நாம் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது இலக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை, வரும் 2026-27-ஆம் ஆண்டுக்குள் எட்டுவோம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கூறியுள்ளாா்.

ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை அடைவதற்கு பிரதமா், நிதியமைச்சா், நிதித் துறைச் செயலா், தலைமைப் பொருளாதார ஆலோசகா் என ஒவ்வொருவரும் ஒவ்வோா் ஆண்டைக் குறிப்பிடுகிறாா்கள். இதில், ஏதாவது ஓராண்டில் ரூ.350 லட்சம் கோடி இலக்கை நாம் அடைந்துவிட்டால், அதைக் கூறி அவா்கள் பெருமைப்பட்டுக் கொள்வாா்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

சம்மன் விவகாரம்: ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்தவித அடிப்படையுமின்றி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. பாஜகவினா் மற்றும் அவா்களின் கட்சி ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என்பதுபோல் தெரிகிறது’ என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.