ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக்னிபத் திட்டம்: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங். எம்.பி.க்கள் பேரணி

தில்லி விஜய் சவுக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

News image
Updated On :20 ஜூன் 2022, 11:50 am

DIN


தில்லி விஜய் சவுக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

ராணுவத்துக்கு ஆள் எடுக்க அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சல்மான் குர்ஷித், கே சுரேஷ், வி நாராயணசாமி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “அக்னிபத் திட்டம் மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.