காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக கமல்நாத் நியமனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத்தை நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கமல்நாத் (கோப்புப் படம்)
கமல்நாத் (கோப்புப் படம்)

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக கமல்நாத்தை நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
 
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில், கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மகாராஷ்டிரத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவிவரும் பதற்றமான நிலை நிலவிவரும்  குறித்து    

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் பாஜக அரசு செயல்பட்டு வரும் நிலையில், மேலிடப் பார்வையாளரை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com