திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

உத்தவ் தாக்கரே ராஜிநாமா

மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:39 am

DIN


மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், 
சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளம் மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, உடன் நின்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் நன்றி தெரிவித்தார். கடினமான சூழலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும் உடன் நின்றதைக் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அடுத்து அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் செல்வதைத் தவிர்த்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.