ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, கமர்தா சாலையில் ஒரு இடத்தை சோதனை செய்தபோது, ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் (பிரவுன்சுகர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.