காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
காஷ்மீரில் நேற்றிரவு முதல் காண்டர்பால் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷா ஏ முகமது அமைப்பின் தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.