ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் என்ற பகுதிக்கு அருகே பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் சமீர் பட் கொலையில் தொடர்புடையவர்கள் எனவும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.