புது தில்லி: இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை, இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் கற்பனை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் நிரப்புவது தடை செய்யப்படவில்லை. 1.14 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.