அரசியல் கட்சித் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரசாந்த் கிஷோா்
பிரசாந்த் கிஷோா்

தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை சில நாள்களுக்கு முன்னதாக வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைய, கட்சித் தலைவர் சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட பதிவில்,

“மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன். பிகாரிலிருந்து தொடங்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்காக இவரது நிறுவனம் தேர்தலில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com