மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே மே 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க- வேலூர்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் தானம்
இதன்படி www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 15 இரவு 9 மணிவரை நீட் விண்ணப்பங்கள் பெறப்படும். அன்று இரவு 11.50 மணிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விவரங்கள், தோ்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தோ்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைதளம் மூலமாக விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ள முடியும்.