தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாட்டில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :17 மே 2022, 5:47 am

DIN

புது தில்லி: நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,260 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,467 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 16,400 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 191.48 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,76,005  கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.