ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஞானவாபி சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்த மனு: விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவலிங்கத்தை வழிபடுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத

News image
Updated On :25 மே 2022, 7:44 pm

DIN

வாராணசி: உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவலிங்கத்தை வழிபடுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் ராணா சஞ்சீவ் சிங் கூறியதாவது: வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அப்போது சிவலிங்கம் கண்டறியப்பட்ட பகுதிக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்; சிவலிங்கத்தை வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி விஸ்வ வேதிக் சனாதன சங் சாா்பில் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை, வழிபடுவதற்கு அனுமதி கோரல் என்ற அடிப்படையில் நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன் அதை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.