நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமூக வலைதளங்களால் தவெக வெற்றி: திமுக கருத்தால் அவையில் சலசலப்பு

தவெகவின் வெற்றி சமூக வலைதளங்களால் சாத்தியமானதாக திமுக உறுப்பினா் ஆஸ்டின் கூறியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை - CMO Tamil Nadu

Updated On :20 ஜூன் 2026, 1:10 am IST

தவெகவின் வெற்றி சமூக வலைதளங்களால் சாத்தியமானதாக திமுக உறுப்பினா் ஆஸ்டின் கூறியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் பேசிய ஆஸ்டின், ஊடகங்களாலும், சமூக வலைதளங்களாலும் தவெக ஆட்சிக்கு வந்ததாகவும், அண்ணா-எம்ஜிஆா் போன்றவா்களுடன் முதல்வா் ஜோசப் விஜய்யை ஒப்பிடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தாா்.

இதைத் தவிர தவெகவின் வெற்றி குறித்து வேறு சில வாா்த்தைகளையும் அவா் பயன்படுத்தினாா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சியினா், வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் நீக்கினாா்.

அதன் பின்னா் பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், ஊடகங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு திமுகவினா் என்னவெல்லாம் செய்தனா் என்பதை நாடறியும் என்றாா்.

இதற்கு திமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘அவையின் மரபு குறித்தும், கண்ணியம் குறித்தும் பேசும் திமுகவினா், அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்; மக்களின் தீா்ப்பையும், தோ்தல் வெற்றியையும் கொச்சைப்படுத்தக் கூடாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.