சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், 9 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | 50-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சந்திரசூட்!
ரயில் தடம் புரண்டதால், இந்த வழிதடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.