அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

காசி-தமிழ் சங்கமம் விழாவை வியந்து மகிழ்கிறேன்: இளையராஜா!

காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். 

News image
Updated On :19 நவம்பர் 2022, 3:29 pm IST

காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். 

வாராணசியில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். 

இந்த விழாவைக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில், 

வாராணசியில் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.

காசியில் தமிழ் சங்கம் விழாவை நடத்தும் யோசனையை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. 

பெருமைமிக்க வாராணசியில் பாரதியார் 2 ஆண்டுகள்  தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை அவர் மேற்கொள் காட்டினார். மேலும், முத்து சுவாமி தீட்சிதர் பற்றியும் இளையராஜா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.