காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
வாராணசியில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவைக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில்,
வாராணசியில் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.
காசியில் தமிழ் சங்கம் விழாவை நடத்தும் யோசனையை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி.
பெருமைமிக்க வாராணசியில் பாரதியார் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை அவர் மேற்கொள் காட்டினார். மேலும், முத்து சுவாமி தீட்சிதர் பற்றியும் இளையராஜா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









