காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
வாராணசியில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவைக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில்,
வாராணசியில் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.
காசியில் தமிழ் சங்கம் விழாவை நடத்தும் யோசனையை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி.
பெருமைமிக்க வாராணசியில் பாரதியார் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை அவர் மேற்கொள் காட்டினார். மேலும், முத்து சுவாமி தீட்சிதர் பற்றியும் இளையராஜா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.