டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மம்தா-சுவேந்து அதிகாரி திடீர் சந்திப்பு: காரணம் இதுதானா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:56 am

DIN

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு நாள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு கட்டத்தில் சுவேந்து அதிகாரியை தனது சகோதரர் போன்று நடத்தியதாக அவர் தெரிவித்தார். கூட்டத்திற்கு பிறகு மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரியை தேநீர் அருந்துவதற்கு அழைத்தார்.

இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சந்தித்துக் கொண்ட விவகாரம் பேசுபொருளானது. 

இது குறித்து கூட்டம் முடிந்த பிறகு சுவேந்து அதிகாரி பேசியதாவது: சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள அரசியலமைப்பு நாள் விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம்பெறவில்லை. நான் இந்த விழாவை புறக்கணிக்கப் போகிறேன். தேநீர் அருந்துவதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் தேநீர் அருந்தவில்லை. எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதே தவிர அரசியல் சார்ந்தது அல்ல என்றார்.

இருப்பினும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த சந்திப்பினை விமர்சித்து வருகின்றனர். பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி இந்த சந்திப்பிலிருந்தே தெளிவாகிறது என விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.