டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் ஆளுநர் இப்படி செய்யலாமா? காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி காலணி அணிந்து கொண்டு  மலர் அஞ்சலி செலுத்தியதை காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:50 pm

DIN

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி காலணி அணிந்து கொண்டு  மலர் அஞ்சலி செலுத்தியதை காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.

2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி தாஜ் ஓட்டல், சத்ரபஜி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா்.  இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மும்பை தாக்குதல் தினத்தையொட்டி மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என பலர் தாஜ் ஹோட்டல் முன்புள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில், ஆளுநர் காலணி அணிந்து கொண்டு நினைவு தினத்தில் மலர் அஞ்சலி செலுத்தியது குறித்து காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது. 

இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சவந்த் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மரியாதை செலுத்தும்போது காலணியை கழற்றிவிட்டு மரியாதை செலுத்துவது இந்திய கலாசாரம் மற்றும் மகாராஷ்டிரத்தின் மிக முக்கிய கலாசாரம். ஆனால், ஆளுநர் தொடர்ந்து மகாராஷ்டிரத்தினையும், அதன் கலாசாரத்தையும் அவமதித்து வருகிறார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் மரியாதை செலுத்துவதற்கு முன்பு அவரிடம் காலணியினை கழற்றிவிட்டு மரியாதை செலுத்துமாறு கூறியிருக்க வேண்டும். தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அவமதிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.