உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவா்களின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாகவும் அகிலேஷிடம் அவர் தெரிவித்தார்.