பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தில், நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. அதுபோல, அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த செப். 21 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.