ஜம்மு : தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு - அக்னூர் சாலையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காஷ்மீர் பண்டிட் பூரண் கிரிஷண் பட் கொல்லப்பட்டார்.
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பூரண் கிரிஷண் பணியாற்றி வந்த நிலையில், இன்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது படுகொலையைக் கண்டித்தும், அண்மையில் காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும் நூற்றுக் கணக்கானோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், நிலைமையை சமாளிக்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி கோஷங்கள் எழுப்பினர்.
எங்களது மோசமான அச்சம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் ஏற்கனவே இப்பகுதியை விட்டு வெளியேறிவருகிறார்கள். இல்லையென்றால் கொல்லப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் போராட்டக்காரர்களில் ஒருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

பலாப்பழம் தலையில் விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


