மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்: கேஜரிவால் 

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி முறையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினார்.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 5:55 pm IST

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி முறையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினார். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் கல்வித்துறையில் அற்புதமான பணியைச் செய்துள்ளோம். அனைத்து அரசுப்பள்ளிகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்று இந்தியில் கூறியுள்ளார். 

எங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் உள்ளது. எங்களை அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள். நாட்டுக்காகச் சேர்ந்து செயல்படுவோம். 

பிரதமர் மோடி பள்ளியறையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட கேஜரிவால் தனது சுட்டுரையில், 

இன்று நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் கல்வி மற்றும் பள்ளிகளைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களின் மிகப்பெரிய சாதனை. தேர்தலின்போது மட்டுமல்லாது, அனைத்து அரசுகளும் இணைந்து ஐந்தே அண்டுகளில் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்ற முடியும் என்றார். 

இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, காந்திநகரில் உள்ள பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடிய பிறகு கேஜரிவாலின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.