நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

18 லட்சம் விளக்குகள்! மோடி வருகை! விழாக்கோலம் பூண்டது அயோத்தி!

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

News image
Updated On :23 அக்டோபர் 2022, 5:01 am

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்களை 22,000-க்கும் அதிகமான பக்தா்கள் ஏற்றி வழிபாடு நடத்த உள்ளனா்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி தீப ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 6வது ஆண்டாக சரயு நதிக்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். மாலை 6.30 மணியளவில் தீப நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார். 

முன்னதாக ராமா் கோயில் கட்டுமானப் பணிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்டு, ராமா் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.