மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கர்நாடகத்தில் எமனாக மாறிய குடிநீர்: பலி 3 ஆக உயர்வு!

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :27 அக்டோபர் 2022, 6:55 am

DIN

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

அக்.23-ம் தேதி முதேனூர் கிராமத்தில் பழைய கிணற்றில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய் இணைப்புகளில், நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதன்விளைவாக 2 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 70 வயது முதியவர் உயிரிழந்தார். 

அசுத்தமான தண்ணீரைப் பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 

உயிரிழந்தவர் சிவப்பா(70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவப்பா நான்கு நாள்களுக்கு முன்பு அசுத்தமான தண்ணீரைப் பருகியதால் நோய்வாய்ப்பட்டார்.

மருத்துவமனையில் உள்ள 94 பேரில், 44 ஆண்கள், 30 பெண்கள். 12 சிறுவர்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர். பாதிக்கப்பட்ட அனைவரும்  வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என ஒரேமாறியான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 

கிணற்றில் உள்ள தண்ணீர் மாசுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து முதேனூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.