நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய தென் கொரியாவில் லேசான நிலநடுக்கம்!

தென்கொரிய நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள விவசாய பகுதியில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

News image
Updated On :29 அக்டோபர் 2022, 9:44 am

DIN

தென்கொரிய நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள விவசாய பகுதியில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தென் கொரியாவின் வானிலை நிறுவனம் கூறுகையில், 

இந்தாண்டு நாட்டில் ஏற்பட்ட 38 நிலநடுக்கங்களில், கோசன்நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் வலிமையானது. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாதுகாப்பு அமைச்சகத்தின் பேரிடர் தலைமையகத்தின் அதிகாரியான லீ ஜே-யோங் கூறுகையில், 

மத்திய வடக்கு சுங்சியோங் மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக, குடியிருப்பாளர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.