அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் கணக்குகளின் புதிய சரிபார்ப்பு செயல்முறை பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் தெளிவாக இல்லை என்றாலும் நிறுவனம் விரைவில் ப்ளூ டிக்கிற்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்களை எடிட் செய்யும் கூடுதல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது.
இதையும் படிக்க: குஜராத் தொங்கு பாலம் விபத்தது: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு!
குறிப்பிட்ட நபருடைய அதிகாரபூர்வ கணக்கு எனில் அதன் அடையாளமாக ப்ளூ டிக் இருக்கும்.
இந்த புதிய அம்சங்கள் நவம்பர் 7 ஆம் முதல் செயல்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.