இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

யுனெஸ்கோவுக்கு நன்றி: கொல்கத்தாவில் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 4:18 pm IST

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், மேற்குவங்கத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய அந்தஸ்து கொடுத்துள்ளது. கலாசார விழாக்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்கத்தில் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை இன்று மெகா பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். 

முன்னதாக இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருப்பு உடை, கருப்பு பொருள்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.