கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

யுனெஸ்கோவுக்கு நன்றி: கொல்கத்தாவில் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:42 pm IST

துர்கா பூஜையை கலாசார பாரம்பரியப் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்திய யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவித்து மேற்குவங்கத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை சிறப்பாகக் கொண்டாட மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், மேற்குவங்கத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு கலாசார பாரம்பரிய அந்தஸ்து கொடுத்துள்ளது. கலாசார விழாக்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்குவங்கத்தில் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை இன்று மெகா பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். 

முன்னதாக இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருப்பு உடை, கருப்பு பொருள்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.