நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது பேசினால் 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள் என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குலாம் நபி ஆசாத் (73), கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, கட்சியிலிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா்.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பது, உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்வது, காஷ்மீா் பண்டிட்களின் மறுகுடியமா்த்துதல் உள்ளிட்டவற்றை கொள்கைகளாக கொண்டு, தனது கட்சி செயல்படுமென அவா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஜம்முவில் மக்களை சந்தித்தப் பிறகு குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
நான் ஜம்முவில் சுமார் 400 பேரை சந்தித்து இருக்கிறேன். 30-35 சட்டப்பேரவை பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளேன். நான் எந்த கட்சியை தொடங்கினாலும் அவர்கள் எனக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள்.