சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார். 

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 10:54 am

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல் காந்தியின் இந்த நடைப் பயணத்தை தேசியக் கொடி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் பயணம் நிறைவடைந்த நிலையில் தற்போது கேரளத்தில் உள்ளார். 

13 ஆவது நாளான இன்று அவர், கேரளத்தில் ஆலப்புழாவில் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து வருகிறார். 

கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 15 கிமீ பயணம் மேற்கொள்கிறார். 

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் 3,600 கி.மீ. நடைப்பயணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.