காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதுபோல மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு தெரிவித்து திக்விஜய் சிங்கும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க | காங். தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே போட்டி; திக்விஜய் சிங் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் ஜூன் 26 முதல் 28 வரை ஜேஷ்டாபிஷேகம்

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: உத்தரவாத கையொப்பமிட்ட பாகிஸ்தான்

செயலிழந்த அரசு இணையதளத்தை நீக்க அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

நீட் தோ்வுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய மனு தள்ளுபடி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


