சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம்: பக்தர்கள் பங்கேற்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.15) விஷு கனி தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம்: பக்தர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.15) விஷு கனி தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ கனி தரிசனத்துகு இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கோயிலில் பல வகையான காய், கனிகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஏப்.19-ஆம் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடைமூடப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com