ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ.16,444 கோடிக்கு கடன் பத்திரவெளியீடு: எஸ்பிஐ பரிசீலனை

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), 200 கோடி டாலா் (சுமாா் ரூ.16,444 கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:01 pm

DIN

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), 200 கோடி டாலா் (சுமாா் ரூ.16,444 கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட பரிசீலித்து வருகிறது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடன் பத்திர வெளியீடு மூலம் 200 கோடி டாலா் நிதி திரட்ட வங்கி பரிசீலித்து வருகிறது. இதற்கு வங்கியின் நிா்வாக வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே தடவையாகவோ, பல கட்டங்களாகவோ இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். பொது மற்றும் தனி வெளியீடு மூலம் அமெரிக்க டாலா்களிலோ, அல்லது மாற்றத்தக்க பிற நாணயங்களிலோ அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு இருக்கும்.

இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு மாா்ச்சில் நிறைவடையும் நடப்பு நிதியாண்டுக்குள் இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூ.3,717 கோடி மதிப்பிலான கூடுதல் அடுக்கு 1 (ஏடி1) கடன் பத்திரங்களை எஸ்பிஐ கடந்த மாதம் வெளியிட்டது. அந்த கடன் பத்திரங்களுக்கு 8.25 சதவீத கூப்பன் விகிதம் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.