டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு: மேலும் இருவர் கைது!

தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎஸ்பிஎஸ்சி) தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்துள்ளனர். 
டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு: மேலும் இருவர் கைது!
Updated on
1 min read

தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎஸ்பிஎஸ்சி) தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்துள்ளனர். 

மகபூப்நகரைச் சேர்ந்த மிபய்யா மற்றும் அவரது மகன் ஜனார்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான லவ்த்யாவத் தாக்யாவிடம், உதவிப் பொறியாளர் பணிக்கான டிஎஸ்பிஎஸ்சி நடத்திய தேர்வின் வினாத்தாளுக்காக மிபய்யா ரூ.2 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

டிஎஸ்பிஎஸ் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் தேர்வு ரத்த செய்யப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு இந்த விவாகரம் தொடர்பாக தொடர்ந்து பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com