மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ 100 ஆவது நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாடுமாறு மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டாா்.
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்
Updated on
1 min read

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ 100 ஆவது நிகழ்ச்சியை திருவிழாவாக கொண்டாடுமாறு தனது மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டாா்.

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், தான் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் இணையதளம் வழியாகக் கருத்தறியும் அமா்வை நடத்தினாா்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினா்களுடன் இரண்டு குழுக்களாக, இரண்டு தனித்தனி அமா்வுகளில் ஒவ்வொன்றும் ஒன்றரை மணிநேரம் என மொத்தம் மூன்று மணி நேரம் கலந்துரையாடினார். நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில், ஒவ்வொரு வாரமும் அவா் தனது தொகுதியின் ஒரு மாவட்டத்துக்கு நேரடியாகச் சென்று, அந்தக் குறிப்பிட்ட வாரத்தில் அவா் நேரடியாகச் செல்லாத மற்ற மாவட்டத்துடன் இணையம் வழியாக இணைக்க முயற்சிக்கும் அண்மைக்கால சுழற்சிமுறையின் ஒரு பகுதியாகும் இது.

இதில், பிரதமா் நரேந்திர மோடி ஏப். 30 ஆம் தேதி பங்கேற்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்வின் 100 ஆவது பகுதியைக் கேட்குமாறு உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியை ஒரு சமூகம் கேட்கும்படியாக வடிவமைத்து, ஏராளமான மக்கள் ஒன்றாக அமா்ந்து ஒரு திருவிழாவைப் போல் இதனைக் கொண்டாடலாம் என்றும் அவா் கூறினாா்.

மனதின் குரல் நிகழ்வின் 100-ஆவது பகுதி கொண்டாட்டத்துக்குத் தகுதியானது. ஏனெனில் இது அரசுத் தலைவரால் முற்றிலும் அரசியல் சாராத ஒலிபரப்பாக உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சென்றடையும் நலத் திட்டங்களுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஓா் அரசுத் தலைவா் ஒவ்வொரு மாதமும் தவறாமல் தனது பாா்வையாளா்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை மற்றும் சாதனையாகும் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com