இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அட்டவணையில், ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், மகாராஷ்டிரத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். 

கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 9,833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் புதிதாக 10,112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com