மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலால் முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
Published on
Updated on
1 min read

தில்லி கலால் முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சிசோடியாவின் நீதிமன்றக் காவல் இரண்டு வாரங்கள்(மே 12) வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரிய மனுவை தில்லி நீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மதுபானம் சாா்ந்த கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்குத் தொடர்பிருப்பதாக, அவரைக் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com