அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மடிக்கணினி, கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி,

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 2:44 am

DIN

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்மூலம் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மடிக்கணினி இறக்குமதி பெருமளவில் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் இணையப் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, பாதுகாப்பு சாா்ந்த சவால்கள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மடிக்கணினி, கணினி உள்ளிட்ட சில வன்பொருள்கள் மக்களின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி, கணினிகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வோா் அதற்கான உரிமத்தை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் அவற்றின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுமே முக்கியமான நோக்கங்கள். உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டே இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடுகளால் மடிக்கணினி உள்ளிட்டவற்றின் விலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்றனா்.

மடிக்கணினி, கணினி இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘இறக்குமதி மீதான கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே வேளையில், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்குக் கட்டுப்பாடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; தடையேதும் விதிக்கப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து ஏற்கெனவே மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யும் வா்த்தகா்களுக்கு மட்டுமே மத்திய அரசு உரிமங்களை வழங்கும். உரிய உரிமம் பெற்றவா்கள் மட்டுமே மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் மடிக்கணினிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல், சாம்சங், டெல், எல்ஜி, ஏசா், ஆப்பிள், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்களின் மடிக்கணினிகள் இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமாா் 700 முதல் 800 கோடி வரையிலான மதிப்பு கொண்ட மடிக்கணினிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டம், மின்னணுப் பொருள்கள் மீது இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.