மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

33 ஆண்டுகளுக்குப் பின்.. ஜம்மு-காஷ்மீர் நீதிபதி கொலையில் மறுவிசாரணை

மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் கஞ்ஜூ வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஆகஸ்ட் 2023, 7:59 am

DIN

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளால், 33 ஆண்டுகளுக்கு முன்பு, சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் கஞ்ஜூ வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஏற்றுள்ளனர்.

ஜேகேஎல்எஃப் நிறுவனர் மொகம்மது மக்பூர் பத் என்ற பயங்கரவாதிக்கு 1968ஆம் ஆண்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீலக்ந்த் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த நிலையில், 1989ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ஸ்ரீநகரில் ஓய்வுபெற்ற நீதிபதி நீல்கந்த் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளிகள் தொடர்பாக மறுவிசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் தகவல்கள் தெரிந்த மற்றும் கொலையாளிகள் பற்றிய துப்பு தெரிந்தவர்கள், தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஜம்மு-காஷ்மீரில் உயர் பதவியில் இருந்தவர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கும் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.