மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்! 

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2023, 7:53 am

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. 

வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது. 39 நாள்களில் இதுவரை 4.25 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் மாரூக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் யாத்திரை இன்று நாள் முழுவதும் நிறுத்தப்பட்டதாக அந்த மாநில ஆணையர் ரமேஷ் குமார் தெரிவித்தார். 

நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற்பகல் 2 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.