
அரவிந்த் கேஜரிவால்
தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார்.
தில்லி நிர்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தில்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
படிக்க: கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு
மாநிலங்களவையில் 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 102 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தில்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததற்காக கார்கே, ராகுலுக்கு "தில்லியில் உள்ள 2 கோடி மக்களின் சார்பாக" நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G