/

ம.பி.யில் லாரி-பேருந்து மோதல்: பெண் பலி, 20 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:48 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரெவா- வாரணசி நெடுஞ்சாலையில் உள்ள கத்கரி கிராமத்திற்கு அருகே அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

ஷாஹ்தோல் மாவட்டத்தில் பியோஹாரியில் இருந்து தனியார் பேருந்து  ஒன்று வாராணசிக்கு சென்று கொண்டிருந்தது. லாரி பின்புறத்தில் இருந்து பேருந்தை தாக்கியதில் பேருந்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

மௌகஞ்சிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ரெவா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.