இந்தியாவின் சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டிருக்கிறது கூகுள்.
இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு புது தில்லியைச் சேர்ந்த கலைஞர் நம்ரதா குமார் அவர்களால் வரையப்பட்ட ஓவியம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரிமாக (கூகுள் டூடுல்) வைக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்து, ஒரு புதிய சகாப்தம் உதயமானது.
நாட்டின் சுதந்திர நாளின் அடையாளமாக, தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் கொடியேற்றும் விழா, நடைபெறும். இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
நாடு முழுவதும் குடிமக்கள் தேசிய கீதத்தை பாடி சுதந்திர இயக்கத்தின் தலைவர்களை நினைவு கூர்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை சிறப்பிக்கும் வகையில், கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள், பரதநாட்டியம் போன்ற நிகரில்லா கலை வடிவங்கள் என கலைகளின் பிறப்பிடமாக உள்ள மாநிலத்திலிருந்து கண்ணைக் கவரும் காஞ்சீவரம் சேலைகள் உள்ளிட்ட ஆடைகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியம் பகிரப்பட்டுள்ளது.
இந்த கூகுள் டூடுல் (Google Doodle) மூலம், காஞ்சீவரம் ஆடை மற்றும் இந்தியாவில் திறமையாக வடிவமைக்கப்படும் இன்னும் பல ஆடைகளின் பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து வெளியீட்டுத் தேதி!

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



