பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினார் நட்டா!

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் தலைமையகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினார் நட்டா!
Updated on
1 min read

புது தில்லி: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் தலைமையகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

கொடியேற்றும் விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

நட்டா டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

நாட்டு மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பாஜக தலைவர் அஞ்சலி செலுத்தினார். தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்த அழியாப் போராளிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com