தமிழ்நாட்டில் ட்ரோன் பொதுசோதனை மையம்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ட்ரோன்களுக்கான பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ட்ரோன்களுக்கான பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களானது, மோட்டாா்கள், பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதுடன், சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகிறது. இந்த இடா்பாடுகளைக் களையும் நோக்கத்துடன், மத்திய அரசின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு சோதனைத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் மானியத்துடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த டிட்கோ ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது. அதன்படி, கெல்டிரான், சென்ஸ் இமேஜ், ஸ்டாண்டா்டு டெஸ்டிங் அன்ட் காம்ப்ளையன்ஸ், அவிக்ஷா ரீடெய்லா்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ.45 கோடி மதிப்பில் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்கவுள்ளன.

இந்தச் சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சா்வதேச தரத்தில் வழங்கும்.

சோதனை மையமானது, ஸ்ரீபெரும்புதூா் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமாா் 2.3 ஏக்கா் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் முதல் ட்ரோன் விமான சோதனை மையம் என்ற பெருமையை வல்லம் வடகாலில் அமையவுள்ள மையம் பெறவுள்ளது. இதன்மூலம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டை மாற்ற இந்தச் சோதனை மையம் உதவும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com