மாநிலங்களவையில் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 
மாநிலங்களவையில் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் 9 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். இவர் இரண்டாவது முறையாக மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2019-ல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபுபாய், ஜெய்சங்பாய் தேசாய்(குஜராத்), கேஸ்ரிதேவ்சிங் திக்விஜய் சிங் ஜாலா(குஜராத்) நாகேந்திர ராய்(மேற்கு வங்கம்) ஆகியோரும், 

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களான டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர், பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் சமிருல் இஸ்லாம் ஆகியோரும் பதவியேற்றனர். 

ஓ-பிரையன், சென் மற்றும் ரே ஆகியோர் பெங்காலி மொழியில் பதவியேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com