நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சந்திரயான் - 3 வெற்றி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2023, 7:01 pm IST

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.  

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னா் இன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. 

பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

சந்திரயான்-3 வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதுபோல தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

மேலும் அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் சந்திரயான்-3 வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் அதிகாரிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.