வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியா கூட்டணியின் இலச்சினை: ஆக. 31-ல் வெளியீடு!

இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் அறிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 2:37 pm

DIN


இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் அறிவித்துள்ளார்.

மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதில் இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படோல், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முழு வீச்சில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டம் உலகத்திற்கு மிகப்பெரிய செய்தியை அறிவிக்கும். இந்தியா கூட்டணியின் இலச்சினை குறித்த அறிவிப்பும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.