தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published On :

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிக லேசான பக்கவாதம் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 3.40 மணியளவில் குமாரசாமி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அப்போது அவர் மிகவும் பலவீனமாகவும், அசௌகரியத்துடன் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூத்த மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் அவரது மருத்துவர் குழுவினர் குமாரசாமியின் உடல்நிலையைக் கவனித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு குமாரசாமி நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

63 வயதாகும் குமாரசாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு நீரிழிவு பாதிப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.