6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? ராகுல் கேள்வி

அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 12:34 pm

DIN

மும்பை: அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், சோனியா மற்றும் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

அப்போது பேசிய அவர், அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 
அதானி குழுமத்தில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. மேலும், முறைகேடு தொடர்பாக ஓசிசிஆர்பி முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதானி குழும முறைகேடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

அதானி குழும முறைகேடுகளில் வினோத் அதானி மட்டுமல்லாமல், சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங்க் மற்றும் நாசர் அலி என்ற இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடாக செய்யப்பட்ட முதலீடுகள் மூலம், அதானி குழும பங்குகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  சீனாவைச் சேர்ந்தவர்களின் முதலீட்டை, நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தில் ஏற்றுக்கொண்டது எப்படி? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.