ராஜஸ்தானில் கடும் பனிப்பொழிவு!

ராஜஸ்தானின் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
பிகானேர் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு | PTI
பிகானேர் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு | PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளதாகவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை மையத்தின் அறிக்கையின்படி, கோட்டா மற்றும் ஜெய்ப்பூரின் பகுதிகளில் மிதமான மழை பதிவானதாகவும் சுரு மற்றும் பிகானேர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகானேர் மிருகக் காட்சி சாலையில்...| PTI
பிகானேர் மிருகக் காட்சி சாலையில்...| PTI

ஆல்வார் பகுதில் மிகக் குறைவான வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கோட்டாவின் சில பகுதிகளில் மற்றும் உதய்ப்பூர் உள்ளிட்ட கிழக்கு ராஜஸ்தானின் பகுதிகளில்  அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 

மாநிலத்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கலாம் எனவும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com