மேற்கு வங்கத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 15 பயணிகள் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா என்ற இடத்தில் ரயில்வே கிராசிங் வழியாக வேகமாகச் சென்ற டிரக் மீது ராதிகாபூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதியது.
மோதிய வேகத்தில் ரயிலின் பெட்டி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. நிகழ்விடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும இந்த விபத்தில் சுமார் 15 பயணிகள் காயமடைந்தனர்.
மேலும் லாரி பலத்த சேதமடைந்ததுடன், ரயில் தண்டவாளமும் பலத்த சேதமடைந்தன. இதனால் அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், மற்றவை திருப்பி விடப்பட்டன.